Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
லட்சத்தீவுகள் நிர்வாகத்தின் சமீபத்திய சீர்திருத்தங்கள் கொடூரமானவை. கருத்து வேறுபாடு கொண்டவர்களை தண்டிக்கும் வகையிலும் ஜன நாயகத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் இவை உள்ளன.
லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை முறையை மதிக்கும் வகையிலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலுமான ஒரு வளர்ச்சித் திட்டமே அவர்களுக்கு தேவை. எனவே புதிய சீர்திருத்தங்களை திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
லட்சத் தீவுகளின் நிர்வாகியாக பிரபுல் கோடா படேல் கடந்த ஆண்டு பதவியேற்றது முதல்,உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றங்களை செய்து வருகிறார். இதற்கு நாடு முழுவதிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்த மதுக்கடைகளுக்கு அனுமதி, மாட்டிறைச்சிக்கு தடை. அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவுப் பட்டியலில் அசைவ உணவு நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால்பிரபுல் கோடா படேலின் முயற்சிகள், உள்ளூர் அரசியல்வாதிகளின் ஊழல் முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT