Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM
லட்சத் தீவு நிர்வாக அதிகாரி பிரபுல்கோடாவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்:லட்சத்தீவு நிர்வாக அதிகாரியாக உள்ள பிரபுல் கோடா பட்டேல், மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து, அங்கு வாழும் முஸ்லிம்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடிஇதில் தலையிட்டு பிரபுல் கோடாவை திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது போன்ற அடக்குமுறையை இப்போது லட்சத்தீவில் மத்திய பாஜக அரசு கையாண்டு வருகிறது. லட்சத் தீவில் பிற மாநில மக்கள் நிலம் வாங்க முடியாது. அங்கே மது கிடையாது. விவசாயம் செய்யும் நிலப்பரப்பு இல்லை என்பதால், மீன்பிடித்தலும், தேங்காய் வணிகமும்தான் முதன்மையான தொழில். மாட்டுக்கறிதான் முதன்மை உணவு. பள்ளி மாணவர்களுக்கான பகல் உணவிலும்கூட மாட்டுக்கறி வழங்கப்பட்டு வந்தது.
மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதி என்பதால் லட்சத் தீவுக்கு துணைநிலை ஆளுநர் கிடையாது. லட்சத் தீவு தலைமை அதிகாரியாக குஜராத் முன்னாள் அமைச்சர் பிரபுல் கோடா பட்டேல் நியமிக்கப்பட்டார். அவர் புதிதாககொண்டு வந்துள்ள மாட்டுக் கறிக்குத் தடை, மதுவுக்கு அனுமதிஉள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அங்குள்ள மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. எனவே, பிரபுல் கோடாவை குடியரசுத் தலைவர் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
பிரபுல் கொண்டுவந்துள்ள மாட்டுக் கறிக்கு தடை,மது அனுமதி மக்களை கொந்தளிக்க செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT