Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM
கே.கே.நகர், முதலாவது செக்டாரைச் சேர்ந்தவர் சரண்யா (34). இவரது மாமனார் மாரடைப்பு காரணமாக கடந்த 25-ம் தேதி இரவு மரணமடைந்தார்.
மறுநாள் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. ஈமச்சடங்குகளை முடித்து உறவினர்கள் வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த விலை உயர்ந்த 5 செல்போன்கள் திருடப்பட்டிருப்பதைகண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கே.கே நகர் காவல் நிலையத்தில் சரண்யா புகார் தெரிவித்தார். அதன்படி, குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT