Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM

புதுச்சேரி அருகே மாணவி தற்கொலை :

புதுச்சேரி

புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் ஆலடிமேடுபேட் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குப்பன். கட்டிடத் தொழிலாளி. இவரது மகள் திவ்யதர்ஷினி (20). பாரா மெடிக்கல் சயின்ஸ் படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சமையல் வேலைகளை கவனிக்காமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினியை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் விஷம் சாப்பிட்டு மயங்கினார். குடும்பத்தினர் அவரை அரசு மருத்தவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x