Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

9 வெளிநாடுகளில் பணிபுரியும் : இந்திய பெண்களுக்கு உதவி மையங்கள் :

புதுடெல்லி

இந்தியாவில் இருந்து பணி நிமித்தம் வெளிநாடு செல்லும் பெண்கள் பலர் ஒப்பந்தப்படி உரிய வேலை கிடைக்காமலும், சம்பளம் கிடைக்காமலும், கொத்தடிமை முறையில் நடத்துவது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது மற்றும் வன்முறையால் பாதிக்கப்படுவது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களில் இருந்து அவர்களை காக்கவும் தேவையான சட்ட மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கவும் மனநல ஆலோசனைகள் அளிக்கவும் பல்வேறு நாடுகளிலும் ஒன் ஸ்டாப் மையங்களை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி முதலில், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தலா ஒரு மையமும், சவுதி அரேபியாவில் 2 மையங்களும் என 9 நாடுகளில் 10 மையங்கள் திறக்கப்பட உள்ளன. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x