Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

கரோனா தொற்றால் உயிரிழக்கும் - பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர், ஊடகவியலாளர் குடும்பத்தினருக்கான இழப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கமுதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழகஅரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே பத்திரிகை, உடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்கள், செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இவர்களின் பணியைஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு கடந்த ஆட்சியில் ரூ.3ஆயிரம் சிறப்பு ஊக்கத் தொகைவழங்கப்பட்டது. இதை உயர்த்திவழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது.அதை ஏற்று ஊக்கத் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கமுதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் அரசால்அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், கரோனா தொற்றால் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இதையும் உயர்த்தி வழங்க வேண்டும் என அளிக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து, இழப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சமாகஉயர்த்தி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x