Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் - கரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று 2-வது அலை கடந்த பிப்ர வரியில் தொடங்கியது. புதுச்சேரி யிலும் கரோனாவின் தாக்கம் அதிக மாக இருந்து வருகிறது. நாள் தோறும் சராசரியாக 1,500 பேர் தொற் றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 30 பேர் உயிரிழக்கின்றனர்.

கரோனா பரவலை கட்டுப்படுத் தும் வகையில் புதுச்சேரியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டுள்ளது. மதியம் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன. ஊர டங்கால் பலதரப்பு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனிடையே, முதல்வர் ரங்க சாமி கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற சென்றதால் இதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. பூரண குணமடைந்த நிலையில், நேற்று சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் மற்றும் அதிகாரிகளுடன் நிவாரண உதவி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர், ஆளுநர் மாளிகைக்கு சென்று ஒரு கோப்பை முதல்வர் வழங்கினார். அதில், ‘ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்க அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. அதற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

இதுபற்றி முதல்வர் ரங்க சாமி கூறும்போது, ‘‘கரோனா இரண் டாவது அலையால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, கரோனா நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் ரூ.3 ஆயிரம் வழங் கப்படும். இதனால் 3.5 லட்சம் அட்டைதாரர்கள் பயன் பெறு வர். அரசுக்கு ரூ.105 கோடி செல வாகும். நிவாரண நிதி விரைவில் வழங்கப்படும்.

கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். மக் கள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது அவசியம். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். தேவையான தடுப்பூசிகள் சுகாதாரத் துறையிடம் கையிருப்பில் உள்ளது. முகக் கவசம் அணிந்து, சமூக இடை வெளியை கடைபிடியுங்கள்’’ என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x