Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM
திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி அலிபிரி மலைப்பாதை மற்றும் சந்திரகிரி அருகே உள்ள வாரி மெட்டு வழியாக சென்று சுவாமியை வழிபடுவது ஐதீகம்.
இந்த இரு மலைப்பாதைகள் வழியே தினமும் 30 முதல் 40 ஆயிரம் பக்தர்கள் படி ஏறிச் சென்று சுவாமியை வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில், திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடியில் மராமத்து பணிகளை செய்து வருகிறது.
இதன் காரணமாக ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை அலிபிரி மலைப்பாதை மூடப்படுகிறது. இதற்கு பதிலாக நிவாச மங்காபுரம்அருகே உள்ள வாரி மெட்டுமார்க்கம் வழியாக பக்தர்கள் மலைப்பாதை வழியாக செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT