Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

ஜி.எஸ்.டி. சிக்கலுக்கு தீர்வு காண ‘காட்மா’ வலியுறுத்தல் :

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சி.சிவக்குமார், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எழுதிய கடிதத்தில், “மத்திய அரசின் ஜி.எஸ்.டி. விதிப்பில் ஜாப் ஒர்க்கில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தாமதமாக ஜி.எஸ்.டி. செலுத்தும் தொழில் முனைவோருக்கு தற்போது விதிக்கப்படும் வட்டி மற்றும் அபராத தொகையை நீக்க வேண்டும்.

பிரதி மாதம் 11-ம் தேதிக்குள்ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், பொருளைவாங்கிய வாடிக்கையாளர் செலுத்திய ஜி.எஸ்.டி. வரியை உள்ளீட்டு வரியாக எடுக்க இயலாது என்ற விதிமுறை திரும்ப பெறப்பட வேண்டும்.

ஜி.எஸ்.டி.யில் உள்ள தொழில்களை பாதிக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x