Published : 27 May 2021 03:11 AM
Last Updated : 27 May 2021 03:11 AM

சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி மீண்டும் பணிகளை தொடங்கினார் :

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி ஆளுநர் மாளிகையில்கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். தொடர்ந்து, அவர் சட்டப்பேரவைக்கு வந்து, தனது அறையில் பணிகளை தொடங்கினார். இதற்கிடையே 9-ம் தேதி காலையில் ரங்கசாமி மீண்டும் சட்டப்பேரவைக்கு வந்தார். சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே இருந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக வீடு திரும்பினார். அன்று மாலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு ஒரு வார காலம் சிகிச்சை முடிந்து 17-ம் தேதி வீடு திரும்பிய ரங்கசாமி, தனிமையில் இருந்தார்.

முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு முக்கிய கோப்புகளை அனுப்பி அதிகாரிகள் கையெழுத்து பெற்றனர். அதிகாரிகளுடன் ரங்கசாமி போனிலேயே ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவைக்கு வந்து முதல்வர் ரங்கசாமி தனது பணிகளைத் தொடங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x