Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM
ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டம் கொந்துகூடா கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். கரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பமுடிவு செய்த இவர்கள் குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு ஒடிசா எல்லைக்கு வந்தனர்.
அங்கிருந்து சிலேரு நதியில் 2 நாட்டுப் படகுகளில் 11 பேர் பயணம் செய்த நிலையில், வழியில் 2 படகுகளும் அடுத்தடுத்து கவிழ்ந்தன. இதில் 3 பேர் மட்டுமே நீந்திக் கரையேறினர். 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து மல்காங்கிரி போலீஸாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து நடந்த தேடுதல் பணியில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். எஞ்சிய 5 பேரை தேடும் பணி தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT