Published : 26 May 2021 03:13 AM
Last Updated : 26 May 2021 03:13 AM

மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு சலுகை நீட்டிப்பு :

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

மாநிலம் முழுவதும் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 31-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

இதனடிப்படையில், மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் ஏற்கெனவே கடந்த 23-ம் தேதி வரை அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்துள்ளதை மேலும் நீட்டிப்பு செய்து, வரும் 30-ம் தேதி வரை மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x