Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

காவலர் உடையில்பூசாரியை கடத்தி ரூ.3 லட்சம் பறிப்பு :

போச்சம்பள்ளி அருகே காவலர் உடையில் பூசாரியை கடத்தி ரூ.3 லட்சம் பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குடிமேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி பெருமாள் (51). இவர் நேற்று பாரூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 23-ம் தேதி மாலை காவலர் உடையில் வந்த மர்ம நபர், காவல் ஆய்வாளர் தங்களை அழைத்து வரச் சொன்னார் என கூறினார்.

இதனை நம்பி நானும் என்னிடம் ஜோதிடம் பயிலும் கோபால் (35) என்பவரும் சென்றோம். அங்கு சென்றபோது சீருடையில் இல்லாத 3 பேர், எங்கள் 2 பேரையும் காரில் கடத்திச் சென்றனர். காவேரிப்பட்டணம் பையூர் மேம்பாலத்தில் கோபாலை இறக்கிவிட்ட மர்ம நபர் என்னை கடத்திச் சென்று கடுமையாக தாக்கியதில் மயக்கமடைந்தேன். இரவு 9 மணிக்கு நினைவு திரும்பியபோது, கிருஷ்ணகிரி அருகே பாறைகள் நிறைந்த மாந்தோப்பு ஒன்றில் இருந்தேன். அங்கு வந்த செட்டஹள்ளியைச் சேர்ந்த அடையாளம் தெரிந்த நபர், என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தி ரூ.25 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாகத் தெரிவித்தார்.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூ.3 லட்சத்தை எனது மகன் ஜானகிராமனிடம் பெற்றுக் கொண்ட மர்ம நபர்கள், என்னை கிருஷ்ணகிரி அவதானப்பட்டி கோயில் அருகே விட்டுச் சென்றனர் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாரூர் போலீஸார் விசாரணை நடத்தி, செட்டஹள்ளியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x