Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

அசாம் மாநிலத்தில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை :

அசாமின் மேற்கு கார்பி ஆங்லாங் மாவட்டத்தில், அசாம் - நாகாலாந்து எல்லையில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் திமாசா தேசிய விடுதலை படை (டி.என்.எல்.ஏ.) அமைப்பின் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட் டனர்.

மேற்கு கார்பி ஆங்லாங் மாவட்ட தனி நாடு கோரி டிஎன்எல்ஏ தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் மிச்சிபைலுங் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்தனர்.

தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x