Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

பொது நிவாரண நிதிக்கு ஊதியத்தை வழங்கிய தூய்மைப் பணியாளர் :

தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாக உள்ள நிலையில், பொது நிவாரண நிதிக்குபொதுமக்கள் மற்றும் தொழிற்துறையினர் நிதி அளிக்கவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சி தூய்மைப் பணியாளரான முருகானந்தம் என்பவர், தனது ஒருமாத சம்பளத்தொகையான ரூ.5222-ஐ முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். ஏழ்மையான சூழலிலும் தனது ஒருமாத சம்பளத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x