Published : 23 May 2021 05:50 AM
Last Updated : 23 May 2021 05:50 AM

தொற்று, ஊரடங்கு குறித்து : ஆட்சியர்களுடன் முதல்வர் : இன்று ஆலோசனை :

சென்னை

தமிழகத்தில் முழு ஊரடங்கைமேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கரோனா தொற்று தடுப்பு பணி, முழு ஊடரங்கை அமல்படுத்துவது குறித்துஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், முதல்வர் காணொலியில்இன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தபடி ஆலோசனை நடத்துகிறார்.

இதில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் தொடர்பான விவரங்களையும் மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிவார் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் வருவாய், சுகாதாரத் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x