Published : 23 May 2021 05:51 AM
Last Updated : 23 May 2021 05:51 AM

சென்னைக்கு மேலும்2 ஆக்சிஜன் ரயில்கள் வருகை :

ஒடிசாவில் இருந்து மேலும் 2 ரயில்கள் மூலம், 128 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நேற்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா,கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகின்றன. அதுபோல், ரயில்வே சார்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ரயில்கள் மூலம் தொடர்ந்து ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில் இருந்து புறப்பட்ட 14-வது ரயில் மூலம் 41.45 மெட்ரிக் டன், 15-வது ரயில்மூலம் 86.98 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னை தண்டையார்பேட்டைக்கு நேற்று வந்தன. தேவையான மருத்துவமனைகளுக்கு இந்த ஆக்சிஜனை விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் இதுவரையில் வந்த 15 ஆக்சிஜன் ரயில்கள் மூலம் மொத்தம் 856 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்திருப்பாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x