Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM

கரோனா தடுப்பு மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து - 11 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை :

தமிழகத்தில் கரோனா தடுப்பு மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 11 மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் தலைமை செயலர் வெ.இறையன்பு நேற்று ஆலோசனை நடத்தினார்.

கரோனா வைரஸ் பரவலுக்கான சங்கிலி தொடரை உடைக்கும் வகையில், தமிழகத்தில் கடந்த மே 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இடையில் மே 15-ம் தேதி முதல் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த முழு ஊரடங்கு மே 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், ஊரடங்கை மேலும் கடுமையாக்கி நீட்டிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க, தற் போது வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக உள்ளதாகவும் இது ஒடிசா அருகில் கரையைக் கடக்கும் என்றாலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதுதவிர, தமிழகத் தில் இம்மாத இறுதியில் தென் மேற்கு பருவமழையும் தொடங்கு கிறது. எனவே, புயல் மற்றும் பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர் பான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.

இவற்றை கருத்தில்கொண்டு தலைமைச் செயலகத்தில் தலை மைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை செய லர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஹர்மந்தர் சிங், வேளாண் துறை செயலர் கே.கோபால், சுகா தாரத் துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன், தொழில்துறை செய லர் நா.முருகானந்தம், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது கரோனா பரவல் தடுப்பு மற்றும் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் இன்று நடக்கிறது. இதில், அதிகாரிகள் மட்டத்திலும், மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் முன் வைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x