Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM

5-வது நாளாக கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்தது - இந்தியாவில் 19 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி :

இந்தியாவில் இதுவரை 19 கோடிக்கு பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 கரோனா தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 2-வதுகட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

அதன் அடுத்த கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டது. தற்போது 3-வது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று காலை 7 மணி நிலவரப்படி 19 கோடியே 18 லட்சத்து 79,503 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தடுப்பூசி போடும் பணியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. மொத்தம் 19 கோடியே 18 லட்சத்து 79,503 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவ பணியாளர்கள் 97 லட்சத்து 24,339 பேருக்கு முதல்டோஸ் தடுப்பூசியும் 66 லட்சத்து80,968 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

அத்துடன், முன்களப் பணியாளர்கள் ஒரு கோடியே 47 லட்சத்து 91,600 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 82 லட்சத்து 85,253 பேருக்கு 2-வது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் இதுவரை 86 லட்சத்து 4,498 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 45 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 5 கோடியே 98 லட்சத்து 35,256 பேருக்கு முதல் டோஸும் 95 லட்சத்து 80,860 பேருக்கு 2-வது டோஸும் போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 20.61 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவும் புதிய சாதனையாகும். கரோனா சிகிச்சையில் குணமடை வோரின் எண்ணிக்கை உயர்ந் துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3, 57,295 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 2 கோடியே 27 லட்சத்து 12,735 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைவோரின் சதவீதம் 87.25 ஆக அதிகரித்துள்ளமது.

இந்தியாவில் இன்னொரு குறிப்பிடத்தக்க சாதகமாக விஷயம், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 59,551 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து 5 நாட்களாக இந்தியாவில் 3 லட்சத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

தமிழகம் முதலிடம்

பத்து மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு 76.66 சதவீதமாக உள்ளது. இவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த நிலையில், கேரள (30,491) மாநிலம் உள்ளது.அதற்கடுத்த நிலைகளில் மகாராஷ்டிரசா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் உள்ளன.

இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x