Published : 22 May 2021 03:12 AM
Last Updated : 22 May 2021 03:12 AM
எஸ்ஆர்எம்யு சார்பில் கொளத்தூரில் மக்களுக்கு 5 லட்சம் முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண்ணையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் கரோனாவால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். கரோனாவை ஒழிக்க தமிழக சுகாதாரத் துறை கூறும் விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்றிட வேண்டும்.
குறிப்பாக, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை கழுவுவது போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், அவசியமின்றி வெளியில் செல்லக் கூடாது. தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதை மக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
எனவே, எஸ்ஆர்எம்யு சார்பில் கொளத்தூரில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் பணியை இன்று தொடங்க உள்ளோம். அதன்படி, மொத்தம் 5 லட்சம் முகக் கவசங்களை வீடுதோறும் இலவசமாக வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT