Published : 22 May 2021 03:12 AM
Last Updated : 22 May 2021 03:12 AM
கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்கான வருமானத்துக்கு தணிக்கை தேவைப்படாத தனி நபர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் ஐடிஆர்-1 அல்லது ஐடிஆர்-4 படிவங்களை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் தனிநபர் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் செப்.30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், வருமானவரி தணிக்கைத் தேவைப்படும் தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியவை வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் அக்.31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வருமானவரி பிடித்தம் தொடர்பாக, படிவம்-16 படிவத்தை ஜூலை 15-ம் தேதிக்குள் வழங்கலாம். வருமானவரி கணக்கை காலதாமதமாக தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2022 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT