Published : 22 May 2021 03:12 AM
Last Updated : 22 May 2021 03:12 AM
திருப்போரூர் அரசு மருத்துவமனை மற்றும் பூஞ்சேரியில் உள்ள கரோனா கேர் மையத்துக்கு இந்திய வளர்ச்சி இயக்கம் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவமனைகள் அமைத்து, தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்போரூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வ தற்காக, இந்திய வளர்ச்சி இயக்கம் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அமைப்பின் ஒன்றிய அமைப்பாளர் விமலா தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சங்கர், காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர், ராமானுஜம் ஆகியோர் பங்கேற்று, கரோனா பரிசோதனைக் கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெப்பமானிகள், முகக்கவசம், கிருமிநாசினி, சானிடைசர், சக்கர நாற்காலி உள்ளிட்டவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை மருத்துவர் அனுசுயா, கரோனா கேர் சென்டர் மருத்துவர் ராஜா, தலைமை செவிலியர் சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, இந்திய வளர்ச்சி இயக்கம்சார்பில் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 60 பேருக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT