Published : 22 May 2021 03:12 AM
Last Updated : 22 May 2021 03:12 AM

இலவச சட்ட உதவி :

திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஊரடங்கு காலத்தில் ஏற்படும் குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, முதியோர் எதிர்நோக்கும் இன்னல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மின்னஞ்சல், வாட்ஸ்-அப் மூலம்இலவச சட்ட உதவி பெற, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, பாதிக்கப்படும் பொதுமக்கள், தங்களது பெயர், பாலினம், வயது, முகவரி ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, தங்களது குறைகளை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை dlsatiruvallur1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 9840760576 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கவேண்டும்.

பின்னர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின்வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவரை உடனடியாக தொடர்புகொண்டு, இலவச சட்ட உதவி வழங்குவார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x