Published : 21 May 2021 03:10 AM
Last Updated : 21 May 2021 03:10 AM

கரோனா தொற்றை கண்டறிய - வீட்டிலிருந்தே பரிசோதனை15 நிமிடத்தில் முடிவு தெரியும் : அடுத்த வாரம் விற்பனைக்கு வருகிறது

புதுடெல்லி

புனேயைச் சேர்ந்த நிறுவனம் வீட்டிலிருந்தபடியே கரோனா தொற்று உள்ளதா என்று சுய பரிசோதனை செய்து கொள்வதற்கான சாதனத்தை (கிட்) உருவாக்கியுள்ளது. இதனால் 2 நிமிடம் சோதனை செய்து 15 நிமிடத்தில் முடிவைத் தெரிந்து கொள்ள முடியும். இந்த மருத்துவ சாதனத்துக்கு (ஸ்டிரிப்) இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி அளித்துள்ளது.

அடுத்த வார இறுதியில் நாடுமுழுவதும் உள்ள 7 லட்சம் மருந்தகங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கும். நாட்டின் 90 சதவீத பின்கோடு ஏரியா வரை தங்களது விற்பனை இருக்கும் வகையில் மருந்தகங்களுடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த சாதனத்தை உருவாக்கிய மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுஜீத் ஜெயின் தெரிவித்தார்.

வீட்டிலிருந்தபடியே சுயமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும். இதில் கரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை மேற்கொள்ளலாம். மீண்டும் ஒருமுறை ஆர்டி-பிசிஆர் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற அச்சம் உள்ளவர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோர் இதன் மூலம் சோதனை செய்து கொள்ள முடியும். இதை எப்படிப் பயன்படுத்துவது குறித்த விரிவான வழிகாட்டுதலும் உள்ளது.

`கோவிசெல்ப்' என்ற பெயரில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பதிவிறக்கம் செய்த பிறகு பரிசோதனை கருவியை பயன்படுத்தும் முறையை தெளிவாக படித்துவிட்டு சோதனை செய்ய வேண்டும். பிறகு பரிசோதனை அட்டையை கோவிசெல்ப் செயலி மூலம் படமாக எடுத்து அனுப்ப (அப்லோட் செய்ய) வேண்டும். இவ்விதம் அனுப்பப்படும் தகவல்கள் ஐசிஎம்ஆர் கோவிட்-19 சோதனை தளத்துக்கு சென்று அங்கு பதிவாகும்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x