Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

நாரதா வழக்கில் : உயர் நீதிமன்றத்தில் : மேல் முறையீடு :

‘நாரதா’ லஞ்ச வழக்கில் மேற்குவங்க அமைச்சர்கள் பிர்ஹத்ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்ட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்தனர். இத்தகவலை அறிந்ததிரிணமூல் தொண்டர்கள் கொல்கத்தாவில் உள்ள சிபிஐஅலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட நால்வருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி நால்வரும் தாக்கல் செய்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நால்வரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நாரதா வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிப்பதற்கு முன் தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x