Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

அந்தமானில் நாளை தொடங்குகிறது - கேரளாவில் ஜூன் 1 முதல் தென்மேற்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை அந்தமானில் நாளை (மே 21) தொடங்கு கிறது. கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் நா.புவியரசன் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 21-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கக் கூடும்.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

அந்தமானில் பருவமழை தொடங்குவதால் ஏற்படும் தாக்கத் தால் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் வரும் 22-ம் தேதி புதிய காற் றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தமிழகம் நோக்கி வரவும், தமிழகத்தில் மழை கிடைக்கவும் வாய்ப்பில்லை. இது புயலாகவும் மாறாது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு தமிழகத்தில் மழை வாய்ப்பு குறையக் கூடும்.

தமிழகத்தில் 20-ம் தேதி நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை யும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங் களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வடகடலோர மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

21-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

22, 23-ம் தேதிகளில் வடதமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழையும், தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை யும் பெய்யக் கூடும்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல் சியஸ் வரை உயரக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய் யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மே 22, 23 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப் பகுதி, தென் மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத் தப்படுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x