Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

சின்ன சேஷ வாகனத்தில் அருள்பாலித்தார் கோவிந்தராஜர் :

திருப்பதி: கரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவ விழாவை இந்த ஆண்டும் ஏகாந்தமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியதை தொடர்ந்து, இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் கோவிந்தராஜர் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். வரும் 26-ம் தேதி வரை ஏகாந்தாமாய் நடைபெற உள்ள கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவத்தில் 2-ம் நாளான நேற்று காலை கோவிந்தராஜ பெருமாள் சின்ன சேஷ வாகனத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x