Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM
கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்புநிவாரணம் வழங்க வேண்டும் என்றுஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘கரோனா தொற்றைத் தடுக்க எனது தலைமையில் இருந்த அதிமுக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைஎடுத்தது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் ஆதரவோடு கரோனா பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
இக்காலகட்டத்தில் தினக்கூலிகள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், கைத்தறி,விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி, பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு விலையில்லாமல் உணவுப் பொருட்கள், நிவாரண நிதி வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது தினசரி கரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மேற்குறிப்பிட்டோருக்கு எந்தவிதமான நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.
எனவே, கடந்த ஆண்டுஅதிமுக அரசு வழங்கியதுபோலஅனைத்துத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக ரூ.2 ஆயிரம் மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பை வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT