Published : 20 May 2021 03:14 AM
Last Updated : 20 May 2021 03:14 AM

முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு : சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவர் :

திருவண்ணாமலை: கரோனா தடுப்புப் பணிக்காக உண்டியல் சேமிப்பு பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவரை தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பாராட்டினார்.

திருவண்ணாமலை நகராட்சி திருவூடல் தெருவில் வசித்து வரும் பள்ளி மாணவர் மாணிக்கவாசகம் என்பவர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனது உண்டியல் சேமிப்பு பணம் ரூ.1,400 தொகையை சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைத்தார். இந்நிலையில், பள்ளி மாணவர் மாணிக்கவாசகம் விரும்பிய ரிமோட் கார் ஒன்றை அவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று பரிசாக வழங்கினார்.

அதேபோல், கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் வசித்து வரும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் தர்சன் (9) என்பவர் கடந்த 8 மாதங்களாக பெற்றோர் கொடுத்த பணத்தை சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.5,036-ஐ மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வசம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நேற்று ஒப்படைத்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி உடனிருந்தார். கரோனா தடுப்புப் பணிக்காக உண்டியல் பணத்தை வழங்கிய மாணவரை ஆட்சியர் வெகுவாக பாராட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அம்மூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி - பூங்கொடி தம்பதியரின் மகள்களான நவீனா (12), ஷர்மிளா (10), மகன் யோகேஸ்வரன் (5) ஆகியோர் தாங்கள் உண்டியலில் சேமித்து வந்த பணம் ரூ.5,036-ஐ தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் நேற்று வழங்கினர். உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவர்களை ஆட்சியர் வெகுவாக பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x