Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

கரோனாவால் உயிரிழந்த நீதித் துறை நடுவர் - நீஷ் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுஉயிரிழந்த நீதித் துறை நடுவர் நீஷ்குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீஷ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நீதித் துறை அலுவலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து சிறப்பு நேர்வாகக் கருதி ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x