Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM
பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான நேற்று 848 புள்ளிகள் உயர்ந்தன.
இதனால் சென்செக்ஸ் குறியீட்டு எண் 49,581 ஆக உயர்ந்தது. ஏப்ரல் 21-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தையில் இந்த அளவுக்கு புள்ளிகள் உயர்ந்தது இதுவே முதல் முறையாகும். இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 245 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டு எண் 14,923 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் பாரத ஸ்டேட் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, ஓஎன்ஜிசி, பஜாஜ் பின்செர்வ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் கணிசமாக லாபம் ஈட்டின. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT