Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM
கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வாத்து திருடிய வழக்கில் கைதாகி தஞ்சாவூர் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். அப்போது, அங்கிருந்த பிஹார் மாநில சிறுவன் ஒருவன், நாட்டுவெடி தயாரிப்பது தொடர்பாக யூ டியூப்பில் நிறைய வீடியோக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், சீர்திருத்தப் பள்ளியில் இருந்து வெளியே வந்த முத்துப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த சிறுவனும், சாக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கடந்த 13-ம் தேதி, தீபாவளிக்கு வாங்கிய வெடியில் இருந்த மருந்துகளை கொண்டு, சணல், காகிதங்களை பயன்படுத்தி நாட்டுவெடி தயாரித்து, அதை வெடிக்க வைத்துஉள்ளனர். இதை வீடியோவாக எடுத்து யூ டியூப்பில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்துநாச்சியார்கோவில் போலீஸார் 2 பேரையும் நேற்று கைதுசெய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT