Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

கோவை மாநகர காவல் ஆணையராக தீபக் எம்.தாமோர் பொறுப்பேற்பு :

தீபக் எம்.தாமோர்

கோவை: கோவை மாநகர காவல் ஆணையராக தீபக் எம்.தாமோர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றிவந்தார். சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன், இவர், தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பணியிடம் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, மத்திய மண்டல ஐஜியாக பணியாற்றிவந்த தீபக் எம்.தாமோர், கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த 2001-ம் ஆண்டு பேட்ச் நேரடி ஐபிஎஸ் அதிகாரியான தீபக் எம்.தாமோர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், கோவை சரக டிஐஜி என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், எஸ்.பி அந்தஸ்தில் இருக்கும்போது, மும்பையில் சிபிஐ கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x