Published : 18 May 2021 03:12 AM
Last Updated : 18 May 2021 03:12 AM

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு - நிவாரண பொருட்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் :

முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை நேற்று வழங்கினார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதிக்கு நேற்று காலை வந்தார். கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

திரு.வி.க.நகர் மண்டலத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக சார்பில் தினந்தோறும் உணவு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர், அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கினார்.

பின்னர், கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும், சானிடைசர், முகக்கவசம் போன்ற பாதுகாப்பு பொருட்களையும் ஸ்டாலின் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x