Published : 18 May 2021 03:12 AM
Last Updated : 18 May 2021 03:12 AM

கரோனா தொற்று பரவலால் பாம்பனில் : மீன்பிடிக்க செல்லாத நாட்டுப் படகுகள் :

பாம்பன் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் காலையில் மீனவா்கள் பிடித்து வரும் மீன்களை வாங்கிச் செல்ல வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் கரோனா தொற்று பரவும் நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நேற்று முதல் ஒரு வாரத்துக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை என நாட்டுப்படகு மீனவர் சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து நேற்று பாம்பன் நாட்டுப்படகு மீனவா்கள் தங்களது நாட்டுப் படகுகளை பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x