Published : 18 May 2021 03:12 AM
Last Updated : 18 May 2021 03:12 AM

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1000 தந்தையை இழந்த சிறுவனின் நேயம் :

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் தாராளமாக முதல்வர் நிவாரண நிதி அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதையறிந்த சிறுவன் நிரஞ்சன்குமார், தனது தந்தை இறந்த நிலையில், வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வரும் உறவினர் அளித்த ரூ.100, ரூ.200-ஐ சேமித்து வைத்து சைக்கிள் வாங்க நினைத்தார். தான் சேமித்த பணத்தில் இருந்து ஆயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக, ராஜபாளையம் வட்டாட்சியர் ரெங்கநாதனிடம் வழங்கினார்.

மாணவரை பாராட்டிய வட்டாட்சியர், ‘நன்கு படிக்க வேண்டும். எந்த உதவி வேண்டுமானாலும் கேள்' எனக் கூறி ஊக்கப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x