Published : 18 May 2021 03:12 AM
Last Updated : 18 May 2021 03:12 AM
தேனி மாவட்டம், பெரிய குளம் அருகேயுள்ள போடாங் குளக் கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (48). இவருக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்துக்கு அருகே முருகன் என்பவரது நிலம் உள்ளது. வரப்பு குறித்து இருவருக்கும் தகராறு இருந்து வந்தது. நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது முருகன் அரிவாளால் செல்வத்தை வெட்டினார். இதில் செல்வம் உயிரிழந்தார். முருகனை பெரியகுளம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் கைது செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT