Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM
களக்காடு கோமதி அம்பாள்சமேத சத்தியவாகீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா,கரோனா பரவல் அச்சம் காரணமாக 2-வது ஆண்டாகரத்து செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலில் வைகாசிமாதம் 10 நாட்கள் நடைபெறும்திருவிழாவில் 9-ம் நாளில்நடராஜர் பச்சை சார்த்தி எழுந்தருளும் வைபவத்திலும், தேரோட்டத்திலும் சுற்றுவட்டார பகுதி மக்கள்திரளாக பங்கேற்பர். இவ்வாண்டுக்கான திருவிழா 16-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கி, 24-ம் தேதி தேரோட்டத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கரோனா கட்டுப்பாடுகளால், கோயில்களில் விழாக்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத் தலங்கள்மூடப்பட்டிருக்கின்றன. இக்கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கவேண்டிய திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT