Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM
திருநெல்வேலி: வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைவுபடுத்துவதற்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆய்வு மேற்கொண்டார்.
வள்ளியூர் - திருச்செந்தூர் சாலையில் மந்த நிலையில் நடைபெறும் வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதை பணிகளை விரைவுபடுத்தி போக்குவரத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று, இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுக்கிறார்கள். இப்பணிகளை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, எம்.பி. சா.ஞானதிரவியம் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். வரும் 24-ம் தேதிக்குள் ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்தை தொடங்கும் வகையில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர். ராதாபுரம் வட்டாட்சியர் கனகராஜ், வள்ளியூர் பேரூராட்சி அலுவலர் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT