Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM

பள்ளி மாணவர்கள் கரோனா நிதியளிப்பு :

தென்காசி: கடையநல்லூர் தாருஸ்ஸலாம் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் சிறுசேமிப்பு பணத்தில் இருந்து கரோனா தொற்று நிவாரண நிதிக்காக ரூ. 10 ஆயிரத்தை, பள்ளி தலைமை ஆசிரியர் சேக் சிந்தா மதாரிடம் வழங்கினர். கடையநல்லூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் மூலம், இத்தொகை தபால் துறை பதிவு அஞ்சல் வழியாக, தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x