Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM
தென்காசி: ஆலங்குளம் அருகே வடிகால் வசதியில்லாததால் சாலையோரம் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள எமராஜா கோயில் தெருவின் ஒரு பகுதியில் நீண்ட காலமாக கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுநீரோடை வசதி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்பகுதி மக்கள் கூறும்போது, “தெருவின் ஒரு பகுதி மாயமான்குறிச்சி ஊராட்சியிலும், மறு பகுதி ஆலங்குளம் பேரூராட்சியிலும் வருகிறது. இந்த தெருவில் சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆலங்குளம் பேரூராட்சி சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. ஊராட்சி எல்லை பிரச்சினை காரணமாக இப்பகுதியில் பல ஆண்டுகளாக கழிவுநீரோடை அமைக்கப்படவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கியுள்ளது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, ஆண்டு முழுவதும் இப்பகுதி மக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். தெரு முழுவதுமே துர்நாற்றம் வீசி வருவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்சினையை சரி செய்து, இப்பகுதியில் கழிவுநீரோடை அமைக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT