Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM

ஆம்பூர் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது :

ஆம்பூர்: ஆம்பூர் அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க மே 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சாராய வியாபாரிகள் தங்களது சாராய வியாபாரத்தை பல இடங்களில் விரிவுப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உமராபாத் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25), பிரேம்குமார் (22) ஆகியோர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், உமராபாத் பிரதான சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பேரணாம்பட்டு பகுதியில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த வாகனத்தில் 100 லிட்டர் சாராய பாக்கெட்டை கடத்தி வந்த ஆம்பூர் மளிகை தோப்புப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (31) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம், சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x