Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM

மது விற்பனை செய்த இருவர் கைது :

திருவண்ணாமலை: வந்தவாசியில் மதுப்பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை பகுதியில் காவல்துறையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீட்டில் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து சுந்தர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1.56 லட்சம் மதிப்பிலான 520 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x