Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் மூலம் 8,700 டன் ஆக்சிஜன் விநியோகம் :

புதுடெல்லி: ரயில்கள் மூலமாக ஏப்ரல் 19 முதல் இதுவரையில் 8,700 டன் அளவில் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதுவரையில் 139 ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்கள், ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் மாநிலங்களுக்கு ஆக்சிஜனை ஏற்றிச் சென்றுள்ளன. தற்போது ஆறு ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் 35 டேங்கரில் 475 டன் அளவில் திரவ ஆக்சிஜனை ஏற்றிச் சென்றுகொண்டிருக்கின்றன என்று ரயில்வே துறை குறிப்பிட்டுள்ளது.

ஆக்சிஜனைப் பெறுவதற்காக மாநில அரசுகள் இந்திய ரயில்வே துறைக்கு டேங்கர்களை அனுப்பின. மொத்தமாக இதுவரையில் 540க்கு மேற்பட்ட டேங்கர்களில் 8,700 டன் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x