Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM

சித்தியை கொன்று இளைஞர் தற்கொலை :

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த ஆங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்(37). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாத்திரை எடுத்துக்கொண்ட அசோக்குமார், கடந்த சில மாதங்களாக மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை.

இதனிடையே தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அசோக்குமார் கூறிவந்ததால், அவரது மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அசோக்குமாருக்கு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக மாத்திரை சாப்பிட்டு வந்த அசோக்குமார் நேற்று, தனது மாமனார் வீட்டுக்குச் சென்று தனது மனைவி, குழந்தைகளை அங்கு விட்டுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, அசோக்குமாரின் வீட்டின் மறுபகுதியில் வசிக்கும் அவரது சித்தி அமராவதியை(50) அசோக்குமார் அரிவாளால் கை, தலை மற்றும் கழுத்து பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அமராவதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு அசோக்குமார் கீழே விழுந்து கிடந்துள்ளார்.

அப்போது, அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின்பேரில், கீழப்பழுவூர் போலீஸார் அங்கு வந்து பார்த்தபோது, அமராவதி கொலை செய்யப்பட்டு கிடந்ததும், அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. பின்னர், இருவரது சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x