Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM
திருவாரூர்: மருந்து வணிகர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என மருந்து வணிகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அச்சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சிற்றரசு உள்ளிட்டோர், தமிழக முதல்வருக்கு அனுப்புவதற்காக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவிடம் வழங்கிய கோரிக்கை மனு: ரெம்டெசிவிர் மருந்துகளை மருந்து வணிகர்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து வணிகர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். மருந்து வணிகர்கள் மற்றும் அதைச் சார்ந்துள்ள மருந்தாளுநர்கள், நிறுவன ஊழியர்கள் என 2 லட்சம் பேருக்கு வயது வரம்பின்றி கரோனா தடுப்பூசி போட முன்னுரிமை வழங்க வேண்டும். மருந்து வணிகர்களுக்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறை மூலமாக அடையாள அட்டை வழங்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் சிகிச்சையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT