Published : 16 May 2021 03:14 AM
Last Updated : 16 May 2021 03:14 AM
இந்தியாவில் கரோனா தொற்று நிலவரம் கவலையளிப்பதாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் பெருந்தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. மொத்தத்தில், இந்தியாவில் கரோனா சூழல் கவலை அளிப்பதாக உள்ளது. கரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலை அதிக அளவில் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
உலக சுகாதார அமைப்பு சார்பில் இந்தியாவுக்கு கரோனா தொற்றுக்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்காலிக மருத்துவமனைகளை அமைப்பதற்கு தேவையான பொருட்களும் கப்பல்கள் மூலம் அனுப்பப்படுகின்றன என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT