Published : 16 May 2021 03:14 AM
Last Updated : 16 May 2021 03:14 AM

எழும்பூர் - திருச்செந்தூர் உள்ளிட்ட - 8 சிறப்பு ரயில்கள் ரத்து :

கரோனா அச்சத்தால் பயணிகள் வருகை குறைவாக இருப்பதால், 8 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். பயணிகள் வருகை குறைந்ததால் பல்வேறு சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் (06105), சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் (02671), புனலூர் - குருவாயூர் (06327/06328), குருவாயூர் - திருவனந்தபுரம் (06341/06342) ஆகிய சிறப்பு ரயில்கள் நாளை முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் (06106), மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் (02672) சிறப்பு ரயில்கள்வரும் 18-ம் தேதி முதல் ஜூன்மாதம் வரை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x