Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

கஞ்சா விற்பனை வழக்கில் ஒரே நாளில் பெண் உட்பட 4 பேர் கைது :

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வலையபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (65). இவரது வீட்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், காமநாயக்கன்பாளையம் போலீஸார் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் இருந்த ஒன்றே கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, தங்கவேலை கைது செய்தனர். இதேபோல, பல்லடம் மாதப்பூர் தொட்டம்பட்டி சுப்பிரமணி (34), அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (61) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில் பல்லடம் போலீஸார் சென்று, இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளபாளையத்தை சேர்ந்தவர் சாந்தி (52). இவர், ஊத்துக்குளி வட்டம் செங்கப்பள்ளி கருப்பன்காட்டில் வசித்து வந்தார். இவர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில் ஊத்துக்குளி போலீஸார் சென்று சோதனை மேற்கொண்டனர். சாந்தியிடம் இருந்து இரண்டே கால் கிலோ கஞ்சாவை கைப்பற்றி, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x