Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

‘ரெம்டெசிவிர்’ மருந்தின் அவசியம் குறித்து - பொய்யான தோற்றத்தை உருவாக்கும் மருத்துவர்கள் : சுகாதாரத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை

‘ரெம்டெசிவிர்’ மருந்து இருந்தால் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியும் என்ற பொய்யானதோற்றத்தை ஒரு சில மருத்துவர்கள் உருவாக்கி வருகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்றுமதுரைக்கு சென்றார். முன்னதாக,சென்னை விமான நிலையத்தில்அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

5 லட்சம் தடுப்பூசிகள் வருகை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவமனையில் ஏற்படுத்தியுள்ள வசதிகள் குறித்தும் நேரில் ஆய்வுசெய்ய மதுரை, சேலம், கோவைசெல்கிறேன். 5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. சில தினங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும். ‘ரெம்டெசிவிர்’ மருந்தினால் எந்த அளவுக்கு உபயோகம் என மருத்துவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

வருத்தமளிக்கிறது

‘ரெம்டெசிவிர்’ மருந்து இருந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற பொய்யான தோற்றத்தை ஒரு சில மருத்துவர்கள் உருவாக்கி வருவது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தின் தேவை 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், 7 ஆயிரம் எண்ணிக்கையில்தான் மத்திய அரசு வழங்குகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x